மாரத்தான் மீது அதீத ஆர்வம்., எட்டாவது மாடியில் உடற்பயிற்சி..! இறுதியில் அரங்கேறிய சோகம்..!!
in chennai IT employee died when doing exercise in 8 th floor
திருச்சி மாவட்டத்தை சார்ந்த பெண்மணியின் பெயர் வனிதா ஜீலியஸ் (வயது 28). இவர் சென்னையில் உள்ள அம்பத்தூரில் இருக்கும் தொழிற்பேட்டை பகுதியில் அமைந்துள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில்., நேற்று வழக்கம்போல பணிக்கு சென்ற வனிதா., நிறுவனத்தின் எட்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து உயிரிழந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., வனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்., இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்., விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த விசாரணையில்., வனிதா நேற்று இரவு தான் பணியில் சேர்ந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இதனை அறிந்த காவல் துறையினர் வனிதாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்த நிலையில்., வனிதாவின் தற்கொலைக்கான விசாரணையை துவங்கியுள்ளனர்.
மேலும்., வனிதா நேற்று முன்தினம் புதிதாக பணியில் சேர்ந்த நிலையில்., அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டுள்ளார்? இல்லை யாரேனும் தள்ளி விட்டு கொலை செய்தனரா? இல்லையேல் தவறி விழுந்து இறந்தாரா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில்., மூன்றாவது மாடியில் பணி செய்து வந்த வனிதா., எதற்காக எட்டாவது மாடிக்கு சென்றார்? என்ற சந்தேகம் காவல் துறையினருக்கு எழவே., இது குறித்த விசாரணையில்., வனிதாவுக்கு மாரத்தான் போட்டிகளில் ஆர்வம் இருந்ததாகவும்., பல்வேறு மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்று உள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும்., தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்பும் வனிதா., பணியிடங்களில் மின்தூக்கியை பயன்படுத்தாமல்., படிகளின் வழியாக நடந்தே செல்வார் என்பதும்., சம்பவத்தன்று இரவு பணி நிறைவு பெற்றதும் வனிதா கட்டிடத்தின் கீழிருந்து மேலே ஏறி உடற்பயிற்சி செய்த சமயத்தில்., தவறி விழுந்து உயிரிழந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in chennai IT employee died when doing exercise in 8 th floor