சென்னை விமான நிலையத்தில் மல்டிப்ளக்ஸ் தியேட்டர்.. அசத்தும் பி.வி.ஆர் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்திய நாட்டில் அமைந்துள்ள முக்கியமான மற்றும் சர்வதேச விமான நிலையத்தில் சென்னை விமான நிலையமும் ஒன்றாக அமைந்துள்ளது. 

இந்திய திரையரங்கு நிர்வாக துறையில் முன்னணி நிறுவனமாக இந்திய அளவில் செயல்பட்டு வருவது பி.வி.ஆர் நிர்வாகம் ஆகும். இந்த நிர்வாகத்தின் சார்பில் சுமார் 50 நகரங்களில் 584 திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த வருடத்தின் முடிவிற்கும் இந்தியா முழுவதிலும் சுமார் 2000 திரைகளை அமைக்க பி.வி.ஆர் நிர்வாகம் முடிவு செய்துள்ள நிலையில், சென்னையில் இருக்கும் விமான நிலையத்திற்கு உள்ளேயே 5 திரைகளை கொண்ட திரையரங்கம் அமைக்கும் முயற்சி துவக்கப்பட்டுள்ளது.

இந்த திரையரங்கம் பலஅடுக்கு கார்பார்க்கிங் வசதி மற்றும் சர்வதேச தரத்துடன் அமையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய பி.வி.ஆர் நிறுவனத்தின் அதிகாரி பிரமோத் அரோரா தெரிவித்த சமயத்தில், 

சுமார் ஆயிரம் இருக்கைகளுக்கு மேலாக கொண்ட 5 திரைகள் கொண்ட திரையரங்கம் அமைக்கப்படவுள்ளதாகவும், இந்த திரையரங்கம் வரும் வருடத்தில் செயல்பாட்டிற்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும், விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்களின் காத்திருப்பு நேரத்தினை பொழுதுபோக்கும் வகையில் அமைக்கவும், சுமார் 20 விழுக்காடு பயணிகள் விமான நிலையத்திற்குள் இருந்தும், 80 விழுக்காடு பயணிகள் பார்வையாளராக வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in chennai international airport pvr construct cinema screen


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->