சென்னை விமான நிலையத்திற்கு செல்லும் மக்களின் கவனத்திற்கு... விமான நிலைய அறிவிப்பு..!!
in Chennai international airport announce airport visit to travel peoples
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்து நீக்கம் செய்யப்பட்டதில் இருந்து பெரும் பிரச்சனை நடந்து வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் எல்லை பிரச்சனையில் ஜம்மு - காஷ்மீரை மையாக வைத்த பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி வருகிறது.
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளும் இந்தியாவில் தாக்குதலை மேற்கொள்ள பல திட்டத்துடன் எல்லையில் அத்துமீறி நுழைந்து வருவதும்., பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்திய அரசின் நடவடிக்கையும் தொடர்ந்து வருகிறது.
மேலும், கன்னியாகுமரியில் வைத்து பயங்கரவாதிகள் காவல் உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டு கொலை செய்தனர். இதற்கு பின்னர் பயங்கரவாதிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்தியாவில் குடியரசு தினத்தில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்தது.
இந்த திட்டத்திற்கு சுமார் 20 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் தயாராகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், உளவுத்துறையின் சார்பாவும் தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருவதால் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் உள்ளனர்.
இந்தியாவில் உள்ள முக்கிய இடங்கள் மற்றும் சுற்றுலா தளங்கள், மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் கண்காணிப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தின் சார்பாக தகவல் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை விமானநிலையம் தனது ட்விட்டர் பக்கத்தில், வரும் ஜனவரி மாதம் 31 ஆம் தேதி அதிகாலை வரை சென்னை விமான நிலையத்தில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னை விமான நிலையம் மூலமாக விமானப்பயணம் செய்யும் பயணிகள் விமான நிலையத்திற்கு முன்கூட்டியே வர அறிவுறுத்தப்படுவதாகவும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை பாதுகாப்புப்படை சார்பாக செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Chennai international airport announce airport visit to travel peoples