கள்ளகாதலியின் கணவரிடம் இருந்து தப்பிக்க நிர்வாணமாக மொட்டை மாடிக்கு ஓட்டம்.!! மொட்டை தெறித்து அரங்கேறிய விபரீதம்.!!
in chennai illegal affair man died police investigation going on
இந்தியாவின் ஆந்திர பிரதேசம் மாநிலத்தை சார்ந்தவர் நாராயணன். இவர் சென்னையில் உள்ள எருக்கஞ்சேரியில் வசித்து வருகிறார். தண்டையார்பேட்டையில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார்.
இதே பகுதியை சார்ந்த பெண்மணியின் பெயர் மாலா. இவருக்கு திருமணம் முடிந்து கணவருடன் வசித்து வந்த நிலையில்., மாலாவிற்கும் - நாராயணனிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கமானது இவர்களுக்குள் கள்ளகாதலாக மாறவே., இருவரும் அவ்வப்போது தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த தருணத்தில்., மாலாவின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்படவே., மாலாவின் கணவர் திலகர் இல்லத்தில் ரகசிய காமிராவை பொறுத்தியுள்ளார்.
இதனையடுத்து இல்லத்திற்கு அடிக்கடி நாராயணன் வந்து செல்வதை அறிந்த திலகர்., இருவரையும் கையும் களவுமாக பிடிப்பதற்கு முடிவு செய்துள்ளார். இவரின் திட்டப்படி நாராயணன் வந்தவுடன் பிடிப்பதற்கு அமைதியாக திலகர் மற்றும் அவரின் உறவினர்கள் சென்றுள்ளனர்.
இவரை கண்டு பதறிப்போன நாராயணன் நிர்வாண கோலத்துடன் மாடிக்கு பதறியடித்து ஓடியுள்ளார். இவர்கள் வந்து பிடித்துவிட்டால் என்ன செய்வது என்று எண்ணி., மாடியில் இருந்து குதித்து தப்பிக்க முயற்சித்த தருணத்தில்., எதிர்பாராத விதமாக படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த நாராயணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில்., இது குறித்து தகவலறிந்து வந்த கவலை துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in chennai illegal affair man died police investigation going on