ரூ.6 லட்சம் பறித்த கள்ளக்காதன்.. கையை அறுத்து தற்கொலைக்கும் முயன்ற கள்ளக்காதலி.! சென்னையில் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


சென்னையில் கள்ளக்காதலனால் இளம்பெண் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை காரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் திருமணமான 30 வயது இளம்பெண். இவருக்கு வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையடுத்து இளம்பெண்ணின் கணவர் அடிக்கடி வெளியூர் சென்ற நிலையில், வாலிபருடன் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் வாலிபர் இளம்பெண்ணை ஏமாற்றி இதுவரை 6 லட்சம் வரை பணம் பறித்துள்ளார். மேலும் பணம் கேட்டு தொடர்ந்து இளம் பெண்ணுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதையடுத்து நேற்று இரவு செல்போனில் தொடர்பு கொண்ட வாலிபர், உடனடியாக பணம் அனுப்புமாறு கூறியுள்ளார். இல்லையென்றால் இருவரும் நெருக்கமான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் இளம்பெண் தற்கொலை செய்து கொள்வதற்காக வீட்டில் இருந்த கத்தியை எடுத்து இடது கையை அறுத்துக் கொண்டுள்ளார். இதையடுத்து மயங்கி கிடந்த இளம்பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Illegal girlfriend tried to commit suicide by cutting off his hand in chennai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->