நடத்தையில் சந்தேகம்: கழுத்தை நெறித்து கள்ளக்காதலி கொலை.! அப்பாவிபோல் நடித்த கள்ளக்காதலன்.! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் நடத்தையில் சந்தேகப்பட்டு கள்ளக்காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் ரெங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள். இவரது கணவர் இறந்த நிலையில் மாரியம்மாள் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மாரியம்மாளுக்கும், முத்துகாலடி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் மாரியம்மாளுக்கு வேறு சில ஆண்களுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகமடைந்த முத்துகாலடி, இது தொடர்பாக அடிக்கடி மாரியம்மாளுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து இருவரும் தனியாக இருந்தபோது இவர்களிடையே மீண்டும் இதுதொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த முத்தகாலடி, மாரியம்மாளின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். மேலும் மாரியம்மாளின் உடலை ரயில்வே தண்டவாளம் அருகே போட்டுள்ளார். இதைத்தொடர்ந்து ரயில்வே தண்டவாளம் அருகே, உயிரிழந்த பெண் உடல் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாரியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பொழுது முத்துகாலடி எதுவும் தெரியாததுபோல் வேடிக்கை பார்த்து இருந்துள்ளார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில், மாரியம்மாள் கொலை வழக்கில் முத்துக்காலடிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, முத்துகாலடி மற்றும் அவருக்கு உதவிய கருப்பையாபாண்டி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

illegal boyfriend arrested for murder a woman in thenkasi


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->