மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் கணவர் தூக்கு போட்டு தற்கொலை.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் மனைவி கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றதால் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ்(50). இவர் கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் யுவராஜ் மற்றும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து தகராறு முற்றிய நிலையில், கோபமடைந்த மனைவி கோபித்துக் கொண்டு அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட யுவராஜ் வாழ்க்கையில் வெறுப்படைந்து வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த யுவராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து கல்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband suicide in Chengalpattu


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->