வரதட்சணை கேட்டு தினம் இளம்பெண் சித்திரவதை., கணவன் கைது..!! - Seithipunal
Seithipunal


 வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்திய கணவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், லால்குடியில் வசித்து வருபவர் பாரத். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சாவித்ரி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 9 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், பாரத் மனைவியிடம் வரதட்சணை கேட்டு தினமும் சித்திரவதை செய்து வந்துள்ளார்.அதுமட்டுமின்றி, அவருடன் சேர்ந்து பாரதின் பெற்றோரும் அவரை தொல்லை செய்துள்ளனர்.

சம்பவதன்று, அந்த பெண்ணை வரதட்சணை வாங்கிவர சொல்லி கட்டையால் அடித்துள்ளனர். இதற்கு மேல் கொடுமையை தாங்க முடியாது  என முடிவெடுத்த அவர் காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரை அடுத்து விசாரணை மேற்கொண்டனர். இதனை அடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து பாரத் ஐ கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband arrested for abusing young woman for dowry


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->