தஞ்சாவூரில் சோகம் - மின்சாரம் தாக்கி கணவன், மனைவி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூரில் சோகம் - மின்சாரம் தாக்கி, கணவன் மனைவி உயிரிழப்பு.!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்ததனால் பல இடங்களில் மரக்கிளைகள் உடைந்து விழுந்து மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன. 

இந்த நிலையில், பேராவூரணி அருகே மிதியக்குடிக்காடு கிராம பகுதியைச் சேர்ந்தவர் உடையப்பன். இவர் இன்று அதிகாலை சுமார் மூன்று மணிக்கு வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது அப்பகுதியில் மழையால் மின் கம்பி அருந்து கீழே விழுந்துள்ளது.  

இதனை கவனிக்காமல் சென்ற உடையப்பன் எதிர்பாராத விதமாக அந்தக் கம்பியை மிதித்துள்ளார். அந்தக் கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் உடையப்பன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சத்தம் கேட்டு வீட்டுக்குள்ளிருந்து ஓடி வந்த அவரது மனைவி, கணவரைக் காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

பொழுது விடிந்ததும், வெளியில் வந்த அக்கம் பக்கத்தினர் கணவன், மனைவி மின்சாரம் தாக்கி உயிரிழந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதன் படி அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் உடலையும் மீட்டு பிரதேச பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம்  அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband and wife died for electric shock attack in thanjavur


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->