குதிரை வாலியில் பொங்கல் செய்வது எப்படி?
how to make kuthirai vali pongal
குதிரை வாலியில் பொங்கல் செய்வது எப்படி?
பலரும் விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்று பொங்கல். இந்தப் பொங்கலை பச்சரிசியில் செய்வது மட்டும் தான் தெரியும். ஆனால், புது விதமாக குதிரைவாலி உள்ளிட்ட தானியத்தை வைத்து எப்படி பொங்கல் செய்வது என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:-
பாசி பருப்பு, நெய், சீரகம், மிளகு, முந்திரி பருப்பு, இஞ்சி, கருவேப்பிலை, உப்பு
செய்முறை :-
முதலில் அடுப்பில் கடாய் வைத்து சூடானதும், நெய் ஊற்றி மிளகு, சீரகம், முந்திரி பருப்பு, நறுக்கிய இஞ்சி, கொஞ்சம் கருவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும். அதன் பின், தேவையான அளவு தண்ணீர் எடுத்து, அதனை கடாயில் ஊற்றி கொதிக்க விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
இதனுடன் குதிரைவாலி மற்றும் பாசி பருப்பை கழுவி சிறிது நேரம் வேக வைக்கவும். அதன் பின், நன்கு கிளறிவிடவும். அவ்வளவுதான், சுடச்சுட குதிரைவாலி பொங்கல் தயார்.
English Summary
how to make kuthirai vali pongal