புதுக்கோட்டை அருகே கோர விபத்து!....அரசு பேருந்து மோதி கிளீனர் உடல் நசுங்கி உயிரிழப்பு! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டையில் இருந்து மன்னார்குடிக்கு லோடுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.  தொடர்ந்து இந்த லாரி இன்று அதிகாலை 4 மணி அளவில் கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகம் அருகே வந்த போது லாரியில் திடீரென பழுது ஏற்பட்டது.

இதையடுத்து உடனடியாக டிரைவர் லாரியை சாலை ஓரமாக நிறுத்தினார். மேலும்,  மன்னார்குடியை சேர்ந்த கிளீனர் ஜீவா லாரியின் சக்கரத்தை கழட்டிக் கொண்டு இருந்த போது, திருச்செந்தூரில் இருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்ற அரசு பேருந்து எதிர்பாராத விதமாக லாரியின் பின் பக்கத்தில் மோதியது.

இந்த சம்பவத்தில் ஜீவா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். மேலும், பேருந்தில் சென்ற சிலருக்கு காயம் ஏற்பட்டது.  இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து,  உயிரிழந்த ஜீவா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு புதுக்கோட்டைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், காயம் அடைந்தவர்களை  மீட்டு புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Horrible accident near pudukottai cleaner crushed to death by government bus


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->