சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இன்று பதவியேற்பு.! - Seithipunal
Seithipunal


சென்னை உயர்நீதிமன்ற முழு நேர தலைமை நீதிபதியாக பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி இன்று பதவி ஏற்றுக் கொள்கிறார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து, இவருக்கு அடுத்த நிலையில் இருந்த மூத்த நீதிபதி திரு. முனீஷ்வர்நாத் பண்டாரி பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் இவரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு முழு நேர தலைமை நீதிபதியாக நியமிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற கொலீஜியம் குடியரசு தலைவருக்கு பரிந்துரை வழங்கியது. இந்த பரிந்துரையை ஏற்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரியை சென்னை உயர்நீதிமன்றத்தின் முழு நேர தலைமை நீதிபதியாக நியமனம் செய்தார்.

இந்நிலையில், கிண்டியில் ஆளுநர் மாளிகையில் இன்று காலை 10.00 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக திரு. முனீஷ்வர்நாத் பண்டாரி பதவியேற்றுக்கொள்கிறார். இவருக்கு ஆளுநர் பதவி பிரமானம் செய்து வைக்கிறார். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள், உயர்நீதிமன்ற நீததிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

High court Chief Justice Swearing ceremony


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->