பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் கைது..!
Headmaster arrested for sexually harassing student Near Thirunelveli
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமை ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் , திசையன்விளையன் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் அந்த பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு ஸ்பெஷல் கிளாஸ் எடுப்பதாக கூறி தலைமை ஆசிரியர் அவர்களை வகுப்பிற்கு வர வைத்திருக்கிறார்.
இதனையடுத்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் இதனால் பயந்துபோன மாணவிகள் இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக மாணவிகளின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் இந்த புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Headmaster arrested for sexually harassing student Near Thirunelveli