அரூரில் ரூ.3.62 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள்! மாவட்ட கலெக்டர் ஆய்வு! - Seithipunal
Seithipunal


தருமபுரி: மாவட்ட கலெக்டர் சாந்தி, கடந்த மாதம் அரூர் பேருந்து நிலையத்தின் மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அரூரில் புதிய பேருந்து நிலைய வளாகம் அமைக்க ரூ.3.62 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் மேம்படுத்தப்படவுள்ளது. 

இதனால், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வாடகைக்கு விடப்பட்டிருந்த கடைகள் அனைத்தும் காலி செய்யப்பட்டு தற்போது நவீன வசதியுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்க்கான கட்டுமான பணிகள் தொடங்கப்படவுள்ளன. 

இந்த பணிகள் குறித்து கடந்த மாதம் மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை செய்த போது அரூரில் தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடம் குறித்து கேட்டறிந்தார். 

அதன் பிறகு நேற்று திடீரென்று அரூர் பேருந்து நிலையம் இடிக்கும் பணி துவங்கியதால், மாற்று பேருந்து அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளாமல் இருந்ததால் சென்னை, வேலூர், சேலம், கோயம்புத்தூர், தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

அதே போன்று, பயணிகள் எங்கே பேருந்து நிற்கும் என்று புரியாமல் தவித்து வருவதால், உடனடியாக மாற்று பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் சாந்தி கோரிக்கை விடுத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Harur rs3.62cros alternative bus stand


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->