தயா விவகாரத்தில், கோபமான எச்.ராஜா.. ட்விட்டரில் மனிதாபிமானம் இல்லாமல் வச்சி செய்யும் சோகம்.!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸின் காரணமாக உலகமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும், கரோனாவின் தாக்கத்தை கட்டுக்குள் வைக்க, அரசு தேவையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 

கரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் சமூக தொற்றாக மாறாமல் இருக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு தேவையான பல்வேறு நிதிஉதவி திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அரசிற்கு மக்கள் நிதியுதவி கொடுத்து உதவலாம் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். 

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் " மக்கள் பிச்சை எடுக்கும் நிலையில் இருக்கின்றனர். இவர்களிடம் பிச்சை எடுக்கிறார் மோடி " என்ற வகையிலான கருத்தைக் கூறியிருந்தார். 

இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தவே, பாஜக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு இது பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், தரக்குறைவாக பேசிய தயாநிதி மாறன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. 

இந்த விஷயம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டரில் பதிவு செய்த பதிவு பெரும் வைரலாகி வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

h raja twit about Dayanidhi Maran


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->