புதுச்சேரியில் அனைவருக்கும் சிலிண்டர் மானியம்.!! ஆளுநர் தமிழிசை ஒப்புதல்.!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சிலிண்டர் மானியம் வழங்கும் மசோதாவுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

முன்னதாக புதுச்சேரியில் ஆண்டுக்கு 12 சிலிண்டர் வீதம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள சிகப்பு அட்டைதாரர்களுக்கு சிலிண்டர் ஒன்றுக்கு 300 ரூபாயும், வறுமை கோட்டிற்கு மேல் உள்ள மஞ்சள் அட்டைதாரர்களுக்கு 150 ரூபாயும் மானியமாக வழங்க வேண்டும் என புதுச்சேரி சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் இந்த மாதமே அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சிலிண்டர் மானியம் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Governor approves cylinder subsidy in Puducherry


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->