தமிழக தங்க மங்கை கோமதி மாரிமுத்து கண்ணீருடன் பேட்டி.!
gomathi marimuthu press meet
23 வது சர்வதேச ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்றது. அதில் 800 மீட்டர் தடகளப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்று அசத்தினார். கோமதி மாரிமுத்து தாயகம் திரும்பியதும் சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோமதி மாரிமுத்து அப்போது பேட்டி அளித்தார். என் சொந்த ஊர் திருச்சி. நீங்க இவ்வளவு ஆதரவு கொடுப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் பெங்களூரில் வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன். ஏன் கர்நாடாவில் வேலை பார்க்கிறாய் என்று நிறைய பேர் கேட்டுள்ளனர். எனக்கு தமிழ்நாட்டில் இருந்து வேலை பார்ப்பதற்கு ஆசை ஆனால் எனக்கு தமிழ்நாட்டில் வேலை கிடைக்கவில்லை.
தமிழ்நாட்டில் வேலை பார்த்துக்கொண்டு இந்த தங்கம் பதக்கத்தை ஜெயித்திருந்தால் இன்னும் சசந்தோஷப்பட்டிருப்பேன். தமிழக அரசு சாதிக்கத் துடிக்கும் ஏழை பெண்களுக்கு உதவி செய்ய வேண்டும். நான் கஷ்டப்பட்டு இந்த நிலைமைக்கு வந்து உள்ளேன். இனி வரும் தலைமுறையினருக்கு அப்படி கஷ்டப்படக்கூடாது என்று கூறினார்.
English Summary
gomathi marimuthu press meet