சென்னை விமான நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்...!! - Seithipunal
Seithipunal


சென்னை மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானத்தில் மாபெரும் அளவிற்கு தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த பயணி ஒருவரை சந்தேகத்தின் பெயரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். 

அப்பொழுது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் அவர் கொண்டு வந்த உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். மேலும் அந்த நம்பரை தனியா அழைத்துச் சென்று சோதனை செய்ததில் உள்ளாடையில் தங்கம் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

அந்த நபரிடமிருந்து சுங்கத்துறை அதிகாரிகள் 1.14 கிலோ கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இந்த தங்கத்தின் இன்றைய மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் ஆகும். இது தொடர்பாக அந்த நபரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தங்கம் கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் யார்..? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gold worth Rs50 lakh seized at Chennai airport


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->