தி.மு.க.வினர் இப்படித்தான் ஓட்டு வாங்க நினைக்கிறார்கள் - ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு.!
GK Vasan speech
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசி இருப்பதாவது,
வன்மை கொடுமைக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். காவிரி மேலாண்மை கூட்டம் வருகின்ற ஏப்ரல் 4 ஆம் தேர்தல் ஆணையம் முறையாக கண்காணிக்க வேண்டும்.
தமிழகத்தில் ஆளும் எதிர்க்கட்சிகள் விதி மீறலை தொடங்கிவிட்டது. மக்கள் தி.மு.கவுக்கு எதிராக இருக்கின்றனர் என நினைக்கும் பொழுது இந்தியை பற்றி பேசுகிறார்கள்.
இதனால் மக்கள் ஏமாறமாட்டார்கள். கடந்த முறை சைக்கிள் கிடைக்கவில்லை. தற்போது முறையான சமயத்தில் கிடைத்துள்ளது. இதற்காக கடந்த 9 வருடமாக போராடினோம். இப்போதுதான் கிடைத்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் தி.மு.கவுக்கு எதிரான எதிர்மறை வாக்குகள் இருப்பது என்னால் பார்க்க முடிகிறது. வாக்காளர்களுக்கு அழுத்தம் கொடுத்து தி.மு.கவினர் ஓட்டு வாங்க நினைக்கின்றனர். தி.மு.க பிரபலங்கள் இருக்கும் தொகுதியில் எங்களது வெற்றி உறுதி என தெரிவித்துள்ளார்.