த.மா.கா. கட்சியின் தலைமை நிலைய செயலாளர் விலகல்: காரணம் இதுதானா? - Seithipunal
Seithipunal


தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் அசோக் கட்சியிலிருந்து விலகியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 

நான் பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். என் தந்தை ஒரு சுதந்திரப் போராட்ட தியாகி. கடந்த 1980 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நின்று வெற்றியை இழந்தவர். 

அவரை தொடர்ந்து நானும் காங்கிரஸ் பேரியக்கத்தில் என்னை இணைத்துக் கொண்டு செயலாற்றி வந்துள்ளேன். கடந்த 1996 ஆம் ஆண்டு மறைந்த தலைவர் ஐயா அவர்களது முடிவை ஏற்றுக் கொண்டு தமிழ் மாநில காங்கிரசில் பணியாற்றி வந்துள்ளேன்.

 

அதேபோல் அவருடைய மறைவுக்கு பிறகு அவருடைய புதல்வனாகிய தங்களின் தலைமையை ஏற்று இன்று வரை பணியாற்றி வந்துள்ளேன். 

தற்போது அரசியலில் தாங்கள் எடுத்துள்ள பா.ஜ.க கூட்டணி ஏற்புடையதாக இல்லை. இதனால் இன்று முதல் கட்சியிலிருந்து விலகிக் கொள்ள முடிவு செய்துள்ளேன். என்னுடைய முடிவை ஏற்றுக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GK Vasan Party Head office Secretary quits


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->