வாசலில் அமர்ந்து தலை வாரிய பெண்..! பக்கத்துக்கு வீட்டுக்காரர் செய்த மோசமான காரியம்.!  - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில், லட்சுமிபுரம், சருத்துபட்டி என்ற கிராமத்தில் வசித்து வரும் சதீஷ்குமாருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவி இருக்கின்றார். சதீஷும், கிருஷ்ணவேணியும் ஒருவரை ஒருவர் காதலித்து பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர். 

இவர்கள் வசித்து வரும் வீட்டின் அருகே இருக்கும் சந்திரன் என்பவருடன் அடிக்கடி இவர்களுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் கிருஷ்ணவேணி அவருடைய வீட்டுவாசலில் அமர்ந்து தலை வாரிக்கொண்டு இருந்துள்ளார். 

அப்பொழுது சந்திரன் தன்னுடைய வீட்டை விட்டு வெளியே போக தயாராகியுள்ளார். கிருஷ்ணவேணியை பார்த்த சந்திரன், "வெளியே போகும்போது தலையை விரிச்சி போட்டு உக்காந்திருக்க?" என்று கேட்டுள்ளார். "நா என் வீட்டுல தான் உட்கார்ந்துருக்கேன். உனக்கென்ன.?" என கேட்டுள்ளார். 

இதனால் சந்திரன் ஆத்திரமடைந்து கிருஷ்ணவேணியை அவதூறாக பேசி அடித்து தாக்க.. அக்கமபக்கத்தினர் ஓடிவந்து தடுத்துள்ளனர். பின்னர் சந்திரன் அங்கிருந்து செல்ல, கிருஷ்னவேணி கணவரை செல்போனில் தொடர்ந்து கொண்டு நடந்ததை கூறிவிட்டு, தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் தற்கொலைக்கு காரணமாக இருந்த பக்கத்துவீட்டுக்காரர் சந்திரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl suicide in theni


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->