கரோனா அறிகுறியுடன், கோவை மருத்துவமனையில் இருந்து தப்பி சென்ற பெண்மணி..!
girl missing and rescued corona symptoms
உலகளவில் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸானது இந்தியாவிலும் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்திற்கு இந்தியாவில் 873 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 19 பேர் பலியாகியுள்ளனர். மேலும், நேற்று ஒரேநாளில் 139 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் நேற்று வரை கரோனா அறிகுறியுடன் இருந்த நபர்களின் எண்ணிக்கை 38 ஆக இருந்தது. இவர்களில் 2 பேர் சிகிச்சை முடிந்து இல்லங்களுக்கு திரும்பிய நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இன்று மேலும் இரண்டு பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், கோயம்புத்தூரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கல்லூரி மாணவி, திருப்பூரை சார்ந்த தொழிலதிபர் கரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 30 பேர் துவக்க அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நேரத்தில், சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் திடீரென மாயமாகியுள்ளார். இவரை காணாது அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பின்னர் காவல் துறையினர் பெண்ணை தேடி வந்த நிலையில், அங்குள்ள பேருந்து நிலையத்திற்கு அருகில் பதுங்கி இருந்துள்ளார். இவரை கண்ட காவல் துறையினர் அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்து மடக்கிப்பிடித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
girl missing and rescued corona symptoms