சாலையில் கிடந்த பெண் குழந்தை… பெற்றோர் குறித்து காவல்துறை தீவிர விசாரணை..! - Seithipunal
Seithipunal


பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளம் குழந்தையை சாலையில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர், ரங்கமாள் நகர் பகுதியில் சாலை ஒரத்தில் கட்டப்பை  ஒன்று கிடந்தது. அதிலிருந்து குழந்தை அழும் சத்தம் கேட்கவே அந்த பக்கத்தில் உள்ளவர்கள் அருகில் சென்று பார்த்தனர்.

அப்போது அதில், பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தை ஒன்று இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல்துறைக்கு உடனடியாக தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து வாழக்குபதிவு செய்த காவல்துறையினர் குழந்தையின் பெற்றோர் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Girl lying on the road


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->