எங்களை வாழ விடுங்கள்., நாமக்கல் பெண் ஓரின சேர்க்கையாளர் தொடர்ந்த வழக்கில்., சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.!
girl love with girl case in chennai hc
நாமக்கல்லைச் சேர்ந்த பெண் ஒருவர் தான் காதலிக்கும் தோழியுடன் என்னை வாழவிடாமல், தனது குடும்பம் ஆணவ கொலை செய்ய முயற்சிப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நாமக்கல்லை சேர்ந்த ஓரின சேர்க்கையாளர் பெண் ஒருவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார், அவரின் அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது, "நானும் எனது நெருங்கிய தோழியும் காதலிக்கிறோம். இதற்கு எனது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து, என்னை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.
இந்த திருமணத்திற்கு நான் சம்மதிக்கவில்லை என்று, என்னை ஆணவக்கொலை செய்துவிட முயற்சி செய்கிறார்கள். இதனால் வீட்டைவிட்டு வெளியேறி, நானும் எனது தோழியும் தனியாக வசித்து வருகிறோம். இந்த நிலையில் எனது தோழி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எனது அண்ணன் காவல் நிலைத்தில் புகார் அளித்திருந்தார்.
இதனையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். எங்களுக்கு உரிய பாதுகாப்பை காவல்துறையினர் வழங்க காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும்." என்று அந்த மனுவில் தெரிவித்து உள்ளார்.
இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார், "மனுதாரரை காவல்துறையினர் எந்த தொந்தரவும் செய்யக்கூடாது. அவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். ஓரினச்சேர்க்கையாளர் தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை காவல்துறையினர் பின்பற்ற வேண்டும்." என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
English Summary
girl love with girl case in chennai hc