நட்பாக பேசிய மாணவியிடம் கல்லூரி மாணவர் செய்த காரியம்.. 6 நாட்களாக அரங்கேறிய கொடூரம்..! வெட்டவெளிச்சமான உண்மை..!
girl abused in 6 days
கும்பகோணத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை 6 நாட்களாக வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை செய்ததாக கல்லூரி மாணவனை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் அணைக்கரையில் உள்ள அரசு பள்ளியில் படித்து வரும் மாணவியிடம், பொறியியல் கல்லூரி பயின்று வரும் மாணவர் ஒருவர் நட்பாக பழகி வந்துள்ளார். தன்னிடம் மாணவி சகஜமாக பழகுவதை பயன்படுத்திக்கொண்ட அந்த கல்லூரி மாணவன் அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு மாணவியை அவரது வீட்டில் அடைத்து வைத்து 6 நாட்களாக பாலியல் தொல்லை செய்து வந்துள்ளார். மாணவியின் பெற்றோர் தனது மகளை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்ததன் பேரில்மாணவியை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது கல்லூரி மாணவரின் வீட்டிலிருந்து அந்த பெண்ணை போலீசார் மீட்டுள்ளனர்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில்,அந்த கல்லூரி மாணவனின் பெற்றோர்கள் வெளிநாட்டில் இருப்பதால் பள்ளி மாணவியை அவரது வீட்டிலேயே அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து கல்லூரி மாணவனை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.