ட்விட்டர் சண்டையில் காயத்ரி ரகுராம் Vs விசிக.! உலகளவில் ஆதரவு திரட்டி, நேரம் குறித்த காயத்ரி..!!
Gayathri Raguramm fight vck boys in twitter and fixed date
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சமீபத்தில், "ஒரு இடம் கோபுரமாக இருந்தால் அது மசூதி, உயரம் உயரமான கட்டிடங்கள் இருந்தால் அது தேவாலயம். அதுவே அசிங்கமான பொம்மைகள் நிறைந்திருந்தால் அதை இந்துக்கள் கோவில்." என்று மகளிர் கூட்டம் ஒன்றில் பேசியது சர்ச்சையை கிளப்பியது.
இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காஞ்சிபுரத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், "நான் பாஜகவிற்கு மோடிக்கு எதிராக பேசுவது திரித்து இந்துக்களுக்கு எதிராக பேசுகிறேன் என்று அவதூறு பரப்பி வருகின்றனர். இந்துக்கள் எனக்கு எதிரிகள் இல்லை. என்னை பின் தொடர்பவர்களில் இந்துக்கள் தான் 85% பேர்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் பாஜக ஆதரவாளரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், காஞ்சிபுரத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய கருத்துக்களுக்கு "கண்ணுல கிளிசரின் போடலாமே சார். நடிப்பு பத்தல," என்று ஒரு பதிவிலும், மற்றொரு பதிவில் அனைத்து இந்துக்களும் இவரை எங்கு கண்டாலும் செருப்பால் அடியுங்கள் என்றும் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.
சர்ச்சையை கிளப்பும் வகையில் காயத்ரி ரகுராம் கொடுத்த இந்த பதிலடி தற்போது வைரலாகி வந்த நிலையில்., இந்த ட்விட்டை கண்ட விசிக ஆதரவாளர்கள் அனைவரும் தாங்களும் இந்து என்பதை மறந்து., இந்துக்களுக்கு குரல் கொடுத்த காயத்ரி ரகுராமன் சமூக வலைதள பக்கங்களுக்கு சென்று அவரை அவதூறாக தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.
காயத்ரி ரகுராமை தொடர்ந்து அவதூறான வார்த்தைகளை கொண்டு வசைபாடிய நிலையில்., இதனையெல்லாம் கண்டு கொள்ளாத அவர் தனது பதிலையும் தெரிவித்துள்ளார். மேலும்., ஆத்திரமடைந்த விசிக கட்சியினர் காயத்ரி ரகுராமன் இல்லத்திற்கு சென்று அடாவடித்தனத்தில் ஈடுபட துவங்கினர். இதனையெல்லாம் பொருட்படுத்த காயத்ரி., திருமாவளவன் கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில்., எனக்கு தொடர்ந்து பல அழைப்புகள் வந்து கொண்டு இருக்கிறது. எனக்கு தொடர்பு கொள்ளும் விசிக கட்சியினர் அனைவரும் அவதூறாக தொடர்ந்து பேசி வருகின்றனர். இதனை நீங்கள் பாருங்கள் என்று ட்விட்டர் பக்கத்தில் லைவ் பதிவிட்டிருந்தார். இவர்கள் அனைவரும் பிற மதங்களையும் பிக்காஸோவின் ஓவியத்தை பாராட்டுவார்கள். இந்துக்களின் ஓவியம் என்று கூறினால் காழ்ப்புணர்ச்சியை பதிவு செய்வார்கள்.
அரசியலை கடந்த குடும்ப உறுப்பினராக இருக்கும் மு.க.ஸ்டாலினிற்கு ஒரு கோரிக்கை. உங்களையும் - உங்களின் குடும்பத்தாரையும் அரசியல் கடந்து எனக்கு தெரியும்.. உங்களின் கூட்டணி கட்சியான திருமாவளவன் கும்பலிடம் இருந்து எனக்கு அதிகளவு மிரட்டல் தொடர்ந்து வருகிறது. இதற்கான நடவடிக்கையை நீங்கள் எடுங்கள். அவரை எம்.பி என்று கூறவே வாய் வரவில்லை.
நான் தற்போது சென்னையில் இல்லை.. எனது வீட்டை முற்றுகையிடும் நபர்களின் நேரம் வீணாக போகிறது. நான் வரும் 27 ஆம் தேதியன்று சென்னை மெரினா கடற்கரைக்கு தனியாக வருகிறேன்.. முடிந்தால் வாருங்கள்.. உங்களை போன்ற வெறிபிடித்தவர்களின் மிரட்டலுக்கு நான் எப்போதும் பயப்பட மாட்டேன். நான் ஒரு நபராக நிற்கிறேன்.. என்னை மீறி திருமாவளவன் இந்துக்களை பற்றி பேசட்டும். நான் ஊருக்கு வந்த பின்னர் காவல் நிலையம் மற்றும் மனித உரிமைகள் ஆணையத்திடம் இது குறித்து புகார் அளிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Gayathri Raguramm fight vck boys in twitter and fixed date