தமிழக பாஜகவின் வார் ரூமில் ஆபாச பேச்சு.. காவல்துறை தலையிட காயத்ரி ராகுராம் வலியுறுத்தல்..!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜகவில் தற்பொழுது ஆபாச உரையாடல், ஆபாச சொற்பொழிவு, ஆபாச செயல்கள் தொடர்பாக பல்வேறு செய்திகள் கசிந்து வருகின்றன. குறிப்பாக தமிழக பாஜக நிர்வாகிகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பாஜக தலைவர் அண்ணாமலையிடம் இருப்பதாக இணையதளத்தில் பரவலாக பேசப்படுகிறது. தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு கமலாலயத்தில் பாஜகவை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்கள் குறித்தான தனிப்பட்ட விவகாரங்கள் அண்ணாமலையின் கீழ் இயங்கும் வார் ரூமில் பேசப்படுவதாக குற்றச்சாட்டை எழுந்துள்ளது.

அவ்வாறு கமலாலயத்தில் இயங்கும் வார் ரூம் நபர்களால் பாதிக்கப்பட்ட காயத்ரி ரகுராம் அண்ணாமலை தலைமையில் இயங்கும் வார் ரூமில் தான் தனிப்பட்ட தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் இதுகுறித்து காவல்துறை விசாரணை செய்ய வேண்டும் என தமிழக காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கீழ் இயங்கும் வார் ரூமில் அருவருக்கத்தக்க தனிப்பட்ட தாக்குதலுக்கு உள்ளாகிறோம். எனவே தமிழக காவல்துறை இது தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும். பெண்கள் குறித்து தரை குறைவான கருத்துக்களை தெரிவிக்கின்றனர்." என பதிவிட்டுள்ளார். தமிழக பாஜகவில் இந்த வார் ரூம் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gayathri ask police investigation in bjp war room matter


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->