கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வி அடிப்படை வசதி மேம்பாட்டு நிதியின் கீழ் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகம் மற்றும் ஸ்ரீ விஜயபுரம் வளாகத்தில் புதிய கல்வி கட்டிடம், விடுதிகள் கட்டுமானம் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு ரூ.5.61 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு கூறினார்.
பாண்டிச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபுவின் அதிகாரப்பூர்வ செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் 1985 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பல்துறை உயர்கல்வி மையமாகும். இது 15 புலங்கள், 41 துறைகள், 9 மையங்கள், 2 தொலைதூர வளாகங்கள் (காரைக்கால் மற்றும் ஸ்ரீ விஜயபுரம்), 2 உறுப்பு கல்லூரிகள் மற்றும் புதுச்சேரி, அந்தமான் & நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகளின் யூனியன் பிரதேசங்களிலுள்ள 119 இணைந்த கல்லூரிகளை உள்ளடக்கியது. இப்பல்கலைக்கழகம் பல சிறந்த முன்னாள் மாணவர்களின் பிறப்பிடமாகவும் உலகளவில் முதல் 2% விஞ்ஞானிகளில் தரவரிசைப்படுத்தப்பட்ட பல புகழ்பெற்ற ஆசிரியர்களின் இருப்பிடமாகவும் விளங்குகிறது, இது அதன் உலகளாவிய பார்வைக்குப் பங்களிக்கிறது.
1. கல்வித் திட்டங்கள்:
1. தற்போது வழங்கப்படும் திட்டங்கள்:
முனைவர் பட்டம் (PhD) – 52
முதுகலை (PG) – 65
இளங்கலை (UG) – 33
5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுகலை – 2
முதுகலைப் பட்டையம்– 5
2. இன்றைய நிலவரப்படி, 9,403 மாணவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 2025-26 ஆம் ஆண்டுக்கான சேர்க்கை திறந்துள்ளது.
3. நாட்டில் தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ முன்கூட்டியே பின்பற்றும் பல்கலைகழகங்களுள் ஒன்று.
தற்போது பல்கலைக்கழகத்தில் 36 NEP அடிப்படையிலான இளங்கலைத் திட்டங்கள் மற்றும் இணைந்த கல்லூரிகளில் 47 திட்டங்கள் வழியாக சுமார் 23,500 மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
4. 2025-26 இல் புதிதாக வழங்கப்படும் திட்டங்கள்:
முதுகலை காட்சிக் கலை (Master of Visual Arts)
முதுகலை அறிவியல் (அளவுசார் நிதி) - M.Sc. (Quantitative Finance)
இளங்கலை பொறியியல் (சுற்றுச்சூழல் பொறியியல்) - B.Tech. (Environmental Engineering)
இளங்கலை அறிவியல் (உளவியல்) - B.Sc. (Hons.) (Psychology)
இளங்கலை அறிவியல் (நிலைத்தன்மை மற்றும் காலநிலை மாற்றம்) - B.Sc. (Hons.) (Sustainability and Climate Change)
இளங்கலை அறிவியல் (உயிர்தகவலியல்) - B.Sc. (Hons.) (Bioinformatics)
5. வெற்றிகரமான முன்னோடி சமுதாயக் கல்லூரி மாதிரியை கரைக்கால், யானம் மற்றும் *ஸ்ரீ விஜயபுரம்* ஆகிய இடங்களுக்கு விரிவாக்கம் செய்து உள்ளூர் சமுதாயங்களுக்குச் சேவை செய்வதற்கான திட்டம்
6. கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வி அடிப்படை வசதி மேம்பாட்டு நிதியின் கீழ் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகம் மற்றும் ஸ்ரீ விஜயபுரம் வளாகத்தில் புதிய கல்வி கட்டிடம், விடுதிகள் கட்டுமானம் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு ரூ.5.61 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
7. HEFA-வின் - - மத்திய கருவி வசதிyஇன் (CIF) கீழ் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ஆய்வக வசதிகளை மேம்படுத்துவதற்கு ரூ.49 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
2. அந்தமான் வளாகத்தில் அடிப்படை வசதி மேம்பாடு:
அ. பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் அந்தமான் வளாகம் ரூ. 14.80 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இது ஆறு மாதங்களுக்குள் நிறைவடையும்.
ஆ. இந்திய அரசின் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT), அந்தமான் & நிக்கோபர் தீவுகளில் கடல்சார் உயிரியல் பாடத்திட்டத்திற்கான உதவித்தொகை மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டிற்கு ரூ. 4.20 கோடியை அனுமதித்துள்ளது.
3. மாணவர் நலன் நடவடிக்கைகள்:
1. மாணவர் நலனுக்கென்று ஒரு புலமுதன்மையர் மற்றும் துணை புலமுதன்மையரோடு கூடிய தனி அலுவலகம் உள்ளது.
2. டிஜிட்டல் கற்றல் சூழல் - WiFi- செயல்படுத்தப்பட்ட வளாகம், ஸ்மார்ட் வகுப்பறைகள், அனைத்து டிஜிட்டல் இந்தியா தளங்கள் மற்றும் திட்டங்களை அணுகும் வசதி உள்ளது.
3. மாணவர்களின் முழுமையான நலன் – தேவைப்படும் போது ஆலோசனை வழங்கும் வசதி, ஆலோசனை மையங்களை நிறுவும் திட்டம், இணைப் பெருங்குழுக்கள் மற்றும் மனநல சங்கங்கள் (தேசிய கல்விக் கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டது போன்று) நிறுவும் திட்டம்.
4. நிதி மற்றும் கல்வி ஆதரவு - SC/ST/OBC/EWS மாணவர்களுக்கு உதவித்தொகைகள், பிற குறைவான பிரதிநிதித்துவம் பெற்ற மாணவர்களுக்குப் பயிற்சிகள், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு 100% இலவச கல்வி வழங்கப்படுகிறது.
5. மாணவர் கலந்தாய்வு, செயல்பாடு மற்றும் உரிமைப்போராட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்கள் குழு தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.
6. வளமான வளாக சூழல் – சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல்மிக்க நவீன விடுதிகள், மாணவர்களுக்கான வசதிகள் மையம் (500 பேர் அமரக்கூடிய ஆம்பிதியேட்டர் உட்பட) உள்ளன.
. தொழில் வளர்ச்சியும் வேலைவாய்ப்பு திறனை உயர்த்தும் நடவடிக்கைகளும் – திறன் மேம்பாட்டு பாடநெறிகள், தொழில்முனைவோர் வளர்ப்பு மையங்கள், தொழில் துறையுடன் தொடர்பு (உள்நோக்கப் பயிற்சி, பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்), வேலைவாய்ப்பு மையம் மற்றும் வேலைவாய்ப்பு கண்காட்சிகள் உள்ளன.
8. இணை மற்றும் கூடுதல் பாடத்திட்ட செயல்பாடுகளை ஊக்குவித்தல் – விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாடு, கலாச்சார விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள், குடிமக்கள் ஈடுபாடு மற்றும் தன்னார்வ செயல்கள் (NSS, NCC, NYKS, MYBharat) ஊக்குவிக்கப்படுகின்றன்.
9. ஆட்சி நடைமுறைகளில் மாணவர்களின் பங்கு – மாணவர்கள் குழு மற்றும் விரிவான கருத்து பெறும் நடைமுறைகள் மூலமாக மாணவர்கள் பங்குபெறுகின்றனர்.
10. நன்கு நிறுவப்பட்ட புகார் தீர்வு வழிமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன – மரியாதைக்கேடான நடத்தை, பாலியல் துன்புறுத்தல், பாகுபாடு, ஒழுக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளைத் தீர்க்க இம்முறைகளில் சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்ட குழுக்கள், அனைத்து பங்குதாரர்களின் பிரதிநிதித்துவம் மற்றும் வெளியக நிபுணர்களின் ஈடுபாடும் கொண்டு செயல்படுத்தப்படுகின்றன.
4. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு:
1. நிதியுதவி பெற்ற திட்டங்களில் கணிசமான வளர்ச்சி – கடந்த ஐந்து ஆண்டுகளில் (2020-25) ரூ.82 கோடி மதிப்பிலான மொத்தம் 252 ஆராய்ச்சி திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
2. ஆராய்ச்சி வெளியீடுகள் மற்றும் காப்புரிமைகள் – சுமார் 6,176 ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடப்பட்டு, 124 காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
3. தொடக்க கட்ட ஆய்வுகளுக்கான உதவித் தொகை – புதிதாக நியமிக்கப்பட்ட 116 ஆசிரியர்களுக்குத் தலா ₹3 லட்சம் வரை, மொத்தம் ₹1.87 கோடி உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
4. மாணவர்களும் பேராசிரியர்களும் தொடங்கும் புதிய நிறுவங்களுக்குத் துணை செய்ய, ஒரு தனிச்சிறப்பு ”புதுமை மற்றும் வியாபாரமயமாக்கல் மையம்” அமைக்கப்பட்டுள்ளது.
அடல் புதுமை திட்டத்தின் (AIM) கீழ் செயல்படும் அடல் சமூக புதுமை மையம் (ACIC), நவீன உழைப்பாளர் மையம் அமைக்க ₹5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
5. பசுமை ஆற்றல் தொழில்நுட்பங்களைச் சார்ந்த எட்டு காப்புரிமைகள், ஆரம்ப கட்ட தொடக்கங்களாக ஸ்டார்ட்டப்புகளாக உருவெடுத்து வருகின்றன. தற்போது அவற்றின் மாதிரிகள் தயாராகிக்கொண்டு, புதுமை சவால்களில் பங்கேற்கின்றன.
6. சரிவிகித வருமானப் பகிர்வு முறை (60:40) மற்றும் ஒழுங்கு நெறிமுறைகளை உட்பொதிந்த ஆலோசனைக் கொள்கை பல்கலைக்கழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. 2020-25 காலகட்டத்தில் இதன் மூலம் ரூ.2.62 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் ஆராய்ச்சியின் சமூக மற்றும் தொழில்துறை பயன்பாடுகள் வெற்றிகரமாக அடையப்பட்டுள்ளது.
7. இந்திய அறிவு அமைப்பு (IKS), ஆயுஷ் அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs), CSIR-ASPIRE, ICMR, AYUSH , DST-SYST போன்ற நிதியுதவிகள் மூலமும் ஆராய்ச்சி முயற்சிகள் மேம்படுத்தப்படுகின்றன.
5. கல்லூரி மேம்பாட்டு கழகம் (இணைப்புப் பிரிவு):
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் – மொத்தம் 119. இவை பல்வேறு அமைப்புகளால் (UGC, AICTE, NCTE, NMC, VCI, DCI, BCI மற்றும் பிற சட்டப்பூர்வ அமைப்புகள்) மீலமக ஒப்புதல் பெற்றவை:
கலை மற்றும் அறிவியல் – 31 கல்லூரிகள்
கல்வியியல் – 25 கல்லூரிகள்
பொறியியல் – 17 கல்லூரிகள்
பல்வகை தொழில்நுட்பம் – 1 கல்லூரி
மருத்துவம் – 6 கல்லூரிகள்
செவிலியர் மற்றும் உடன் சார்ந்த மருத்துவம் – 18 கல்லூரிகள்
பல் மருத்துவம் – 3 கல்லூரிகள்
சட்டம் – 3 கல்லூரிகள்
கால்நடை மருத்துவம் – 1 கல்லூரி
கலை மற்றும் கலாச்சாரம் – 1 கல்லூரி
வேளாண்மை – 1 கல்லூரி
ஆராய்ச்சி நிறுவனங்கள் – 12
விதிமுறைகளைப் பின்பற்றி, சட்டப்பூர்வ அமைப்புகளின் சீர்தரத்துடன் இணைந்து கல்லூரிகளின் செயல்திறனை மதிப்பீடு செய்தல்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்ச்சி மையங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மூலம் முனைவர் பட்ட (PhD) பாடநெறிகளைத் தொடங்குதல்.
தேசிய கல்விக் கொள்கையின் (NEP) வழிகாட்டுதலின் கீழ் கல்லூரிகளில் திறன் மேம்பாட்டு மையங்களை நிறுவுதல்.
இணைப்பு பெற்ற கல்லூரிகளுக்கான விண்ணப்பச் செயல்முறைகளை ழுமையாக மெய்நிகராக்க (digitization) திட்டமிடல்.
6. சர்வதேச மற்றும் தேசிய ஒத்துழைப்புகள்:
49 சர்வதேச புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் 63 தேசிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (இன்றைய நிலவரப்படி மொத்தம் 112 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்)
MA (S.E.A.L.) என்பது பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் பாரிஸ் - பாந்தியோன்-சோர்போன் பல்கலைக்கழகம், பிரான்சு ஆகியவற்றால் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படும் 5-ஆண்டு, இரட்டைப்பட்ட திட்டமாகும். மாணவர்கள் தங்களது 3 ஆவது ஆண்டை பங்குதாரர் பல்கலைக்கழகத்தில் பயில வாய்ப்பு உள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மாணவர் / பேராசிரியர் பரிமாற்றம் (2020-25):
மாணவர் பரிமாற்றம் – வெளியே சென்றோர்: 123; வந்தோர்: 39
பேராசிரியர் பரிமாற்றம் – வெளியே சென்றோர்: 15; வந்தோர்: 10
4. நிதியுதவி வாய்ப்புகள்:
1. தெற்கு ஆசிய அறக்கட்டளை (SAF) – ஒவ்வொரு ஆண்டும் தெற்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த 16 வெளிநாட்டு மாணவர்களுக்கு ”மதன்ஜீத் பசுமை ஆற்றல் தொழில்நுட்ப பள்ளி”யில் M.Tech. படிப்பைத் தொடர கல்வி உதவித்தொகை வழங்குகிறது.
2. எராஸ்மஸ் கல்வி உதவித்தொகை (மொத்தம் சுமார் ₹2 கோடி) – ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்படும் இந்த உதவித் தொகை மேலாண்மை, கணிதவியல், சுற்றுலா மற்றும் உயிரியல் அறிவியல் துறையிலுள்ள மாணவர்களுக்கு, ஐரோப்பிய பங்குதாரப் பல்கலைக்கழகங்களில் ஒரு பருவம் கல்வி பயில வாய்ப்பை வழங்குகிறது.
5. சர்வதேச பங்குதாரர்களுடன் இணைந்து நடத்தப்படும் இணை/இரட்டைப் பட்டப் படிப்புகளில் கவனம் அதிகரிப்பு:
1. மொரீஷியசில் உள்ள மாஸ்காரிக்னிஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தரவு பகுப்பாய்வு படிப்பு.
2. ஜெர்மனியில் உள்ள Koblenz பணி நுட்ப அறிவியல் பல்கலைக்கழகத்துடன் Supply Chain Management படிப்பு.
7. சமீபத்திய NAAC மறு-அங்கீகாரம் (சுழற்சி-5 - 2019-24 உள்ளடக்கியது ):
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் சமீபத்தில் தேசிய தரமதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (NAAC) ஆல் அதன் ஐந்தாவது சுழற்சி மதிப்பீட்டில் (2019–2024) A+ தரத்துடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த A+ மதிப்பீடு பல்கலைக்கழகம் அதன் 40-ஆண்டு வரலாற்றில் பெற்ற மிக உயர்ந்த மதிப்பீடாகும், இது முந்தைய இரண்டு சுழற்சிகளில் (2006-2019 இல்) வழங்கப்பட்ட A தரங்களை விஞ்சுகிறது.
3. இந்த வெற்றிகரமான பேறு, பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தை இந்தியாவின் முன்னணி மத்திய பல்கலைக்கழகங்களில் ஒன்றாக நிலைநாட்டுகிறது.
4. NAAC மதிப்பீட்டில், பல்கலைக்கழகம் ”பாடத்திட்ட அம்சங்கள்" (Curricular Aspects) தரவரிசையில் மொத்தம் 4-க்கு 3.87 மதிப்பெண் பெற்றுள்ளது. இது அதன் முற்போக்கான பாடத்திட்ட வடிவமைப்பு, கல்வி நெகிழ்வுத்தன்மை, மற்றும் கற்பவர் மற்றும் சமூக தேவைகளுக்கான பதிலளிப்பைக் குறிக்கிறது.
5. அதேபோல், “ஆராய்ச்சி, புதுமைகள் மற்றும் விரிவாக்கம்" தரவரிசையில் 3.56 மதிப்பெண் பெற்றுள்ளது, இது பல்கலைக்கழகத்தின் பலத்த ஆராய்ச்சி வெளிப்பாடு, புதுமைச் சூழல், ஆலோசனைத் தொடர்கள் மற்றும் சக்திவாய்ந்த ஒத்துழைப்புகளை பிரதிபலிக்கிறது.
6. சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவைகளுக்கான பசுமை ஆய்வு (Green Audit), பாலின ஆய்வு (Gender Audit), மற்றும் அணுகல்திறன் ஆய்வு (Accessibility Audit) போன்ற முயற்சிகள் பெரிதும் பாராட்டப்பட்டன.
எதிர்கால நோக்கில், பல்கலைக்கழகம் ஒரு பாரம்பரியமான வளர்ச்சிப் பாதைக்கான திட்டத்தை வகுத்துள்ளது. இதில், சேவை குறைந்த பகுதிகளில் சமூகக் கல்லூரி (Community College) மாதிரியை விரிவுபடுத்துதல், சர்வதேச பங்குதாரர்களுடன் இணைந்து இணை மற்றும் இரட்டைப் பட்டப் படிப்புகள் வழங்குதல், தொழில்நுட்பம் மூலம் இயக்கப்படும் ஆன்லைன் மற்றும் தொலைதூர கல்வியை ஊக்குவித்தல் மற்றும் 2030க்குள் Net-Zero காம்பஸ் நிலையை அடைய சூழலியல் நிலைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு முயற்சிகளை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்.சமீபத்தில் பெற்ற A+ தரச் சான்றிதழ், பல்கலைக்கழகத்தின் மேன்மையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இதை முன்னிட்டு, பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் துல்லியமான நோக்கத்துடன், இந்தியாவின் உயர்கல்வி, புதுமை மற்றும் நிலையான வளர்ச்சி குறித்த இலட்சியங்களுக்குப் பயனுள்ள பங்களிப்பை வழங்கும் விதமாக, வளர்ச்சியின் அடுத்த கட்டத்தினை நம்பிக்கையுடன் ஆரம்பிக்கவுள்ளது. இது மாணவர்களைப் புதிய அறிவாற்றல் மிக்க பொருளாதாரத்திற்குத் தயார் செய்யும் நோக்கில் அமைந்துள்ளது என துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு கூறினார்.