அதிமுகவை எவனாலும் அழிக்க முடியாது - அரங்கத்தையே அதிரவைத்த எடப்பாடி பழனிசாமி.!
former cm edapadi pazhanisamy speach in ex minister kamaraj family marriage function
தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று, முன்னாள் அமைச்சர் இரா.காமராஜின் இல்லத் திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக்க்கத்தின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அங்கு அவர் பேசியதாவது, "இந்த டெல்டா பூமியில் இருந்துதான் உணவு உற்பத்தி செய்து எல்லோருக்கும் அனுப்பப்படுகிறது. தமிழகத்தில் காவிரி நதிநீர் பிரச்சினையை ஜெயலலிதாதான் தீர்த்து வைத்தார். ஜெயலலிதாவின் அரசு நடந்தபோது விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசிடம் போராடி இந்த டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக வாங்கி கொடுக்கப்பட்டது.
இங்குள்ள விவசாயிகளுக்காக 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போதுள்ள அரசு மின்சாரம் வழங்க காலக்கெடு நிர்ணயித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் இந்த பகுதியில் மின்வெட்டு இருக்கிறது.
அதிமுகவை ஆரம்பித்த எம்ஜிஆர், ஜெயலலிதாவை மறந்து விட்டு சொந்த நலனின் கருத்தாக இருந்த களைகள் எடுக்கப்பட்டுவிட்டது. இனி அதிமுக செழித்து நன்றாக வளரும்.
அதிமுகவில் நான் எப்போதும் தொண்டனாக தான் இருக்கிறேன். நான் எப்போதும் என்னை தலைவர் என்று சொல்லிக் கொண்டது கிடையாது. என்னைப்போல் ஒரு லட்சம் பழனிச்சாமிகள் அதிமுகவில் இருப்பதனால், எவனாலும் அதிமுகவை அழிக்க முடியாது.
அதிமுகவில் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இருக்கும் வரை இந்த கட்சியை எவனாலும் தொட்டுப் பார்க்க முடியாது. எவனாலும் உரிமை கொண்டாட முடியாது. இந்த தொண்டர்களின் ஆசிர்வாதத்தோடு நாம் மீண்டும் ஆட்சி அமைப்போம்" என்று பேசியுள்ளார்.
English Summary
former cm edapadi pazhanisamy speach in ex minister kamaraj family marriage function