உற்சாகத்தில் சுற்றுலா பயணிகள்! நேற்றைய அளவான 5000 கன அடியாகவே இன்றும் நீடிக்கும் ஒகேனக்கல் நீர்வரத்து...! - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு, தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.இந்நிலையில் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான  நாட்றாம்பாளையம், அஞ்செட்டி, கேரட்டி,ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது.

இதன் காரணமாக, நேற்று சுற்றுலா தளமான ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5000 கனஅடியாக வந்தது.இந்நிலையில் இன்று 8 மணி நிலவரப்படி இன்றும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.

இதனால் சினிபால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.மேலும், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

இதில்,தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.அதன் பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

அதுமட்டுமின்றி, மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

flow of water from Hogenakkal continues to remain at yesterday level of 5000 cubic feet


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->