பெரம்பலூர் அருகே, மருத்துவமனைக்குள் வெள்ளம்.. மீட்பு பணியில் தீயணைப்புத்துறையினர்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பருவமழை காரணமாக பல இடங்களில் கன மழை பெய்து வெள்ளம் ஆக்கி இருக்கின்றது. சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் குடியிருப்பு பகுதியில் இருக்கும் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். மேலும் மின்சாரத் தாக்குதலுக்கும் உள்ளாகின்றனர்.

இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக கல்லாறு மற்றும் கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கின்றது. அந்த பகுதியில் வாழும் மக்களின் வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் தவித்து வருகின்றனர்.

மேலும், விளைநிலங்களும் மிகவும் சேதமடைந்த இருக்கின்றது. இந்த நிலையில் கிருஷ்ணாபுரத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையிலும் வெள்ள நீர் புகுந்ததன் காரணமாக படுக்க இடமின்றி நோயால் அவதிப்பட்டு வருகின்றனர்.

அதன் பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் கயிறுகட்டி பொதுமக்களை பத்திரமாக வெளியேற்றினர் .அதன் பின்னர் அங்கு இருக்கும் நோயாளிகள் அனைவரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டு இருக்கின்றனர்.         


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

FLOOD IN PERAMBALUR HOSPITAL


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->