கடலில் மீன் பிடித்த 5 தமிழக மீனவர்கள் கைது.!!
five tamilnadu fishermans arrested
கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் கெடுவதுடன் குடும்பமும் கஷ்டத்திற்கு ஆளாகின்றது. இந்த நிலையில், மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
அதாவது, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 5 மீனவர்களை கைது செய்தனர். மேலும், ஜஸ்டின் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து இலங்கை கடற்படை கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
five tamilnadu fishermans arrested