திண்டுக்கல்: காரில் ஏற்பட்ட மின்கசிவு.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மூவர்...!
Fire due to electrical leakage in the car
சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், விருப்பாட்சியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றிற்கு அவர்களது காரில் சென்றுள்ளார். தாராபுரம் அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது காரில் இருந்து புகை வருவதை கண்ட அவர்கள் காரை விட்டு இறங்கினர். காரில் மளமளவென தீ பரவியது. தீயணைப்புதுறைக்கு வருவதற்குள் கார் முற்றிலுமாக சேதமடைந்தது.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர். முதற்கட்ட விசாரணையில், காரில் ஏற்பட்ட மின்கசிவால் தீப்பற்றியது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Fire due to electrical leakage in the car