கொழுந்து விட்டு எரிந்த பேப்பர் கம்பெனி -  திருப்பூரில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் செயல்பட்டு வரும் கருணாம்பிகை பேப்பர் ஸ்டோர் நிறுவனத்தில் ஏராளமான அட்டைப் பெட்டிகள் மற்றும் பிரின்டிங் செய்ய பயன்படுத்தப்படும் கெமிக்கல்கள் உள்ளிட்டவை அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், இந்த நிறுவனத்தில் இருந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை கிளம்பியது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் படி விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் குடோன் முழுவதும் அட்டைப்பெட்டிகள் நிரம்பி இருந்ததாலும், பிரின்டிங் செய்ய பயன்படுத்தப்படும் கெமிக்கல்கள் இருந்ததாலும் தீயை அணைப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தெரிவித்ததாவது:- "மின் விபத்து காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த தீ விபத்து தொடர்பாக நிறுவனத்தின் உரிமையாளரிடமும் விசாரணை நடத்தப்படும். விசாரணையின் முடிவிலேயே சேத மதிப்பு குறித்து தெரியவரும்" என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fire accident in tirupur paper company


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->