சென்னை || ரெயில் பணிகளுக்கான இரும்பு தடுப்புகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ..! - Seithipunal
Seithipunal


மெட்ரோ ரெயில் பணிகளுக்கான இரும்பு தடுப்புகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை, காட்டுப்பாக்கத்தில் தனியார் ஃபேப்ரிகேஷன் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதில் மெட்ரோ ரயில் பணிக்கு பயன்படுத்தப்படும் இரும்பு தடுப்புகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதன் சேமிப்பு கிடங்கில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

அங்குள்ள பொருட்களில் பரவியதால் மளமளவென தீப்பரவியது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீயை  அணைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில்  மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fire accident in Chennai


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->