கல்லூரி சுற்றுலா பேருந்து தீவிபத்து.. அதிர்ஷ்டவசமாக தப்பிய மாணவர்கள்..! - Seithipunal
Seithipunal


கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரள மாநிலம் குற்றூர் பகுதியிலுள்ள பி.எட் கல்லூரியில்  பிடெட் பயிலும் 37 மாணவர்கள் மூன்று ஆசிரியர்களுடன் கோவாவிற்கு கல்வி சுற்றறுலா சென்றனர். சுற்றுலா முடிந்து நேற்று மாலை குற்றூர் திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது பனாஜி பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்த போது திடீரென கரும்புகை எழுந்துள்ளது. இதனை கவனித்த மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளனர். அவர்கள் வெளியேறிய சிறிது நேரத்தில் பேருந்து தீப்பற்றி எரிந்தது.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் தீயாய் அணைத்தன்னர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீவிபத்தில் மாணவர்களின் உடமைகள் எரிந்து நாசமாயின. அதிர்ஷ்டவசமாக அனைவரும் காயமின்றி தப்பினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fire accident In Bus


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->