நேர்காணலில் 30 மதிப்பெண்களுக்கு 15 மதிப்பெண்கள் சலுகை! தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தை கைவிடுவார்களா?
Fifteen marks concession in interview cooperate with the government decision
போராட்டத்தை கைவிட்டு அரசின் முடிவுக்கு ஒத்துழைக்குமாறு கோரிக்கை!
சென்னையில் போராட்டம் நடத்தி வரும் கௌரவ விரிவுரையாளர்களை நிரந்தர பணிநீக்கம் செய்ய வேண்டும் என அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கு உயர்கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. பணி நீக்கம் செய்யப்படும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு பணி அனுபவச் சான்று தரக்கூடாது நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கூடாது கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தை கைவிட கல்லூரி முதல்வர்கள் தெரிவிக்க வேண்டும். பணி நீக்கம் செய்யப்படும் இடங்களுக்கு யுசிஜி விதிகளை பின்பற்றி தகுதியான நபர்களை நியமிக்க வேண்டும் என அறிக்கை வெளியானதாக பரவலாக பேசப்பட்டது. மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் புதியதாக நான்காயிரம் உதவி பேராசிரியர்கள் விரைவில் நியமனம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

நேற்று உயர்கல்வி துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் போராட்டத்தில் ஈடுபடும் கௌரவ பிரிவையாளர்களை பணி நீக்கம் செய்ய உத்தரவு பிறப்பதற்காக வெளியான தகவல் மறுக்கப்பட்டுள்ளது. கௌரவ விரிவுரையாளர்களை பணி நீக்கம் செய்ய எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. ஆசிரியர் தேர்வு ஆணையம் மூலம் 4000 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும், அதில் தற்பொழுது பணி புரியும் கௌரவிரியாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உயர்கல்வி துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் நேற்று விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் தமிழக உயர்கல்வித்துறை சார்பில் பத்திரிகை செய்தி வெளியிட்டப்பட்டுள்ளது. அந்த பத்திரிகை செய்தியில் "ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 4000 உதவி பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வில் கௌரவ விரிவுரையாளர்கள் கலந்து கொள்ளலாம் அவர்களுக்கு நேர்காணலில் மொத்தம் உள்ள 30 மதிப்பெண்களில் 15 மதிப்பெண்கள் சலுகை மதிப்பெண்ணாக வழங்கப்பட்டுள்ளது இதற்கு அரசாணைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன கௌரவிரியாளர்கள் தேர்வுகளில் பங்கேற்க பங்கேற்று பணி வாய்ப்பு பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அரசு கல்லூரிகளில் ஒரு சில கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிய வருகிறது. அவர்களும் போராட்டத்தை கைவிட்டு அரசின் முடிவுக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்" என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Fifteen marks concession in interview cooperate with the government decision