காதலிப்பதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை - 2 குழந்தைகளின் தந்தை கைது - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் காதலிப்பதாக கூறி சிறுமியை வெளியூருக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த இரண்டு குழந்தைகளின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் முத்துமாலைபுரம் பகுதியை சேர்ந்தவர் அஜித் குமார் (25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அஜித் குமார் சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி வெளியூருக்கு அழைத்து சென்றுள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து இது குறித்து பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமி குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து அஜித் குமாரின் செல்போன் சிக்னலை வைத்து வெளியூரில் இருந்த இரண்டு பேரையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து சிறுமி மற்றும் அஜித் குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுமிக்கு அஜித்குமார் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. 

இந்நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் தொந்தரவு கொடுத்த அஜித்குமாரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அஜித் குமார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Father of 2 children arrested for sexually harassing girl in thenkasi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->