மருமகள் நடத்தையில் சந்தேகம்.. துடிதுடிக்க மாமனார் செய்த கொடூர சம்பவம்.!
Father-in-law's brutal killed daughter-in-law's doubt behavior
மருமகள் நடத்தையில் சந்தேகப்பட்ட மாமனார் கழுத்தை நெரித்தும், முகத்தில் தலையணையை வைத்து அழுத்தியும் கொலை செய்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை அடுத்த லாலா குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் இசக்கி ராஜ். இவர் சற்று மனநிலை சரியில்லாதவர் என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக இவரின் முதல் மனைவி விவாகரத்து பெற்று இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.
அதன் பின்னர் மத்தளம் பாறை கிராமத்தைச் சேர்ந்த பத்மாவதி (வயது 33) என்கிற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். மனைவி பத்மாவதி தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அங்கு வேலை செய்த இடத்தில் அவருக்கும் அவருடன் வேலை செய்து வரும் ஆண் ஒருவருக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் பத்மாவதியின் மாமனார் முருகேசன் பலமுறை கண்டித்தும் கேட்காததால், பத்மாவதிகள் கழுத்தை நெரித்தும், முகத்தில் தலையணை வைத்து அழுத்தியும் துடிதுடிக்க கொலை செய்துள்ளார்.
இந்த நேரத்தில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பத்மாவதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்த முருகேசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Father-in-law's brutal killed daughter-in-law's doubt behavior