கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு.! மருமகளை கத்தியால் குத்திய மாமனார்.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சொத்து தகராறில் மருமகளை கத்தியால் குத்திய மாமனாரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பச்சிகானப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் நிரோஷா (23). இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இவருக்கும், இவரது மாமனார் திருப்பதிக்கும்(65) இடையே சொத்து பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த திருப்பதி, மருமகள் என்று கூட பாராமல் கத்தியால் நிரோஷாவை குத்தியுள்ளார். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையடுத்து காயமடைந்த நிரோஷா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து நிரோஷா குருபரப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு மருமகளை கத்தியால் குத்திய மாமனார் திருப்பதியை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Father in law stabbed daughter in law in kirishnagiri


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->