தர்மபுரி அருகே உழவு செய்தபோது டிராக்டர் கவிழ்ந்து விபத்து - விவசாயி உடல் நசுங்கி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டத்தில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் விவசாயி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டம் செல்லானூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி வெங்கடசாமி (46). இவரது மனைவி சரிதா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் வெங்கடசாமி விவசாயம் செய்து கொண்டு சொந்த டிராக்டர் வைத்து உழவு ஓட்டி வந்தார்.

நேற்று போடரஅள்ளி அருகே வாழைத்தோட்ட பள்ளத்தில் உள்ள தொட்டான் என்பவரது நிலத்தில் உழவு ஓட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக டிராக்டர் கவிழ்ந்து அதன் அடியில் வெங்கடசாமி சிக்கிக்கொண்டார்.

இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே வெங்கடசாமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வெங்கடசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Farmer killed in Tractor overturned accident in dharmapuri


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->