நண்பன் மனைவி மீது மோகம்.. சபலத்தால் பிரபல ரவுடிக்கு ஏற்பட்ட விபரீதம்.!
famous rowdy killed by his partner
விழுப்புரம் மாவட்டத்தில் கோட்டகுப்பம் அருகே மணவாளன் என்ற இளைஞரும், ஆனந்த் என்ற இளைஞரும் நண்பர்கள். இருவரும் பிரபல ரவுடியாக இருந்துள்ளனர். இருவரின் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
கட்டப்பஞ்சாயத்து போன்ற விஷயங்களில் ஈடுபடுவதால் திருமணமான ஆனந்தின் வீட்டிற்கு மணவாளன் அடிக்கடி சென்று வருவது வழக்கம். இந்நிலையில், ஆனந்தின் மனைவியை கண்ட மணவாளனுக்கு அவர் மீது ஆசை ஏற்பட்டுள்ளது.
எனவே என் நண்பன் இல்லாத நேரம் பார்த்து அவருடைய வீட்டிற்கு சென்று அவரது மனைவிக்கு தொந்தரவு கொடுத்துள்ளார். அந்த பெண் தனது கணவரிடம் இது குறித்து தெரிவிக்க மனைவியை சீண்டுவதை விட்டுவிடு என்று மணவாளனை ஆனந்த் எச்சரித்துள்ளார்.
அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் ஆனந்த் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்து கட்டியிருக்கிறார். கொலை செய்வதற்கு முன்பாக மது அருந்த மணவாளனை தனியாக அழைத்துச் சென்று உள்ளனர்.
English Summary
famous rowdy killed by his partner