டிக் டாக் மோகத்தால், விலைமாதர்களாக வீதியில் நின்ற அவலம்.!
family distroy for the tik tok video
தமிழகத்தின், மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர்கள் மீனாட்சி மற்றும் கயல். இவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகள் ஆவர். இவர்கள் இருவருக்கும் டிக்டாக் மீது இருந்த தீராத மோகத்தால், இருவரும் டான்ஸ், காமெடி என்ற பல வீடியோக்களை டிக்டாக்கில் அள்ளி தெளித்து வந்தார்கள்.
அப்போது மீனாட்சிக்கு டிக்டாக்கில் மூலமாக தேனியை சேர்ந்த சுகந்தி என்பவருடன் அறிமுகமானது. சுகந்தி லைக்குக்காக அவரது ஆண் நண்பருடன் சேர்ந்து கும்மாளம், அடிக்கும் வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்தார்.
அதுவே ஒரு கட்டத்தில் மீனாட்சிக்கும், சுகந்திக்கும் கருத்து மோதல் ஏற்பட காரணமாக இருந்தது. இதனால் மீனாட்சி சுகந்தியிடம் பேசுவதை தவிர்த்து விட்டார்.
இதன் காரணமாக, கடும் கோபமடைந்த சுகந்தி அவரது ஆண் நண்பருடன் சேர்ந்து மீனாட்சி மற்றும் கயலின் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து அதை விபச்சார பெண்களாக, வீடியோவை சித்தரித்து அதை சமூக வலைதளங்களில் பரவி விட்டனர்.
இதனால் இரண்டு தோழிகளின் குடும்பங்களிலும், வாழ்க்கையிலும் பூகம்பம் வெடித்தது. கயலின் நடத்தையில் அவரது கணவர் சந்தேகப்பட்டு, வீட்டை விட்டு துரத்தி விட்டுள்ளார்.
அதன்பின், காயல் காப்பகம் ஒன்றில் தஞ்சம் அடைந்திருக்கிறார். இதைத்தொடர்ந்து சுகந்தி மீது மீனாட்சி ஒத்தகடை காவல் நிலையத்திலும், கயல் மதுரை மாநகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்கள்.
இதைதொடர்ந்து சுகந்தி மற்றும் அவரது நண்பரான செல்வா இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளது. ஆனால் இதற்கு முன்னதாக சுகந்தி முன்ஜாமீன் பெற்று விட்டதால், அவரின் செல்போன்கள் கைப்பற்றியுள்ள நிலையில் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
English Summary
family distroy for the tik tok video