ஆன்மீகம் என்ற போர்வையில் பக்தர்களின் அந்தரங்கங்களை ரகசியமாக பார்த்த போலி சாமியார் கைது!
Fake guru arrested for secretly observing the devotees inner sanctums under the guise of spirituality
மகாராஷ்டிராவில் 'தெய்வீக சக்திகள்' உள்ளவர் என கூறி, பக்தர்களின் மொபைல்களில் உளவு செயலி நிறுவி அவர்களின் அந்தரங்கங்களை ரகசியமாக பார்த்த போலி சாமியார் பிரசாத் தாதா பீம்ராவ் தாம்தார் (29) கைது செய்யப்பட்டுள்ளார்.
29 வயதான ' போலி சாமியார் பிரசாத் தாதா பீம்ராவ் தாம்தார் ,தன்னை நாடி வரும் பக்தர்களை புனித மாந்திரீகம்' செய்ய வேண்டும் என கூறி, பக்தர்களின் தொலைபேசியில் ரகசியமாக செயலி நிறுவினார்.இதையடுத்து கேமரா, மைக்ரோஃபோன், GPS ஆகியவற்றை தொலைவிலிருந்து இயக்கி தனிப்பட்ட தருணங்களை போலி சாமியார் பார்த்தார்.
மேலும் “நீங்கள் நான்கு மாதங்களில் இறந்து விடுவீர்கள்” என பக்தர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கினார்.அதுமட்டுமல்லாமல் மரணத்திலிருந்து தப்பிக்க பாலியல் உறவு தேவை என தவறான ஆலோசனைகள் வழங்கினார்.சில இளம் ஆண்களுக்கு, செல்போன்களை குறிப்பிட்ட கோணங்களில் வைக்கும்படி கூறி பாலியல் தருணங்களைப் போலி சாமியார் பிரசாத் தாதா பீம்ராவ் தாம்தார்பார்த்து ரசித்தார்.
இந்த சமயத்தில் ஒரு பக்தரின் மொபைல் தொடர்ந்து சூடாகியதை அவதானித்து, நண்பரின் உதவியுடன் மறைக்கப்பட்ட செயலி கண்டறியப்பட்டது.பாபா மட்டுமே சமீபத்தில் தொலைபேசியைப் பயன்படுத்தியிருந்ததால், அவர் மீது சந்தேகம் உறுதி செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து 3 புகார்கள் அடிப்படையில் போலீசார் போலி சாமியார் பிரசாத் தாதா பீம்ராவ் தாம்தார் கைது செய்தனர்.மேலும் அவர் மீது பாரதிய நியாய் சன்ஹிதா மற்றும்மகாராஷ்டிரா சூனியம் மற்றும் அகோரி நடைமுறைகள் தடுப்பு சட்டம், 2013 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது."ஆன்மீகம் என்ற போர்வையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது சமூகத்திற்கு ஆபத்தான எச்சரிக்கை," என போலீசார் தெரிவித்துள்ளனர்.
English Summary
Fake guru arrested for secretly observing the devotees inner sanctums under the guise of spirituality