திமுக கொடி கட்டிய காரில் கள்ளநோட்டு கடத்தல்...!! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தை அடுத்த சேந்தமங்கலம் போலீசாருக்கு சிலர் கள்ள ரூபாய் நோட்டுக்களை கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் சேந்தமங்கலம் பயணியர் மாளிகை அருகே தீவிர வாகன சோதனையில் சேந்தமங்கலம் போலீசார் ஈடுபட்டிருந்தனர். 

அப்பொழுது அவ்வழியாக வந்த திமுக கொடி கட்டிய ஜீப்பை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். போலீசார் நடத்திய சோதனையில் ரூ.7 லட்சம் மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து அந்த ஜீப்பில் பயணம் செய்த கொல்லிமலை அடுத்த சோளக்காட்டை சேர்ந்த செல்வதுரை, எல்லக்கிராய்பட்டியை சேர்ந்த சதாசிவம் புத்தூர்பட்டியை சேர்ந்த சிலம்பரசன் ஆகிய மூவரை சேந்தமங்கலம் போலீசார் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கள்ள நோட்டுகள் எதற்காக கொண்டுவரப்பட்டது, நல்ல நோட்டாக மாற்ற முயன்றனரா அல்லது வேறு ஏதும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திமுக கட்சி கொடி கட்டிய காரில் கள்ளநோட்டு கடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fake currency notes catched in a car with DMK flag


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->