Breaking: கோவையில் சிக்கிய போலி 2000 ரூபாய் நோட்டுகள்! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம் அடுத்த பெரியநாயக்கன்பாளையத்தில் இரிடியம் விற்பனை செய்வதாக கூறி ஒரு கும்பல் செயல்படுவதாக ரகசிய தகவல் போலீசாக கிடைத்துள்ளது. இதனை அடுத்து பெரியநாயக்கன்பாளையம் அடுத்த பிரஸ் காலனியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் கட்டு கட்டாக போலி 2000 ரூபாய் நோட்டுகள் சிக்கி உள்ளன. மேலும் பழங்கால பொருட்களும் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மூன்று பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முதற்கட்ட விசாரணையில் இரிடியம் எனக் கூறி மோசடி செய்யும் கும்பல் என தெரியவந்துள்ளது. இவர்கள் யார்? இதில் மூன்று பேர் மட்டுமே சம்பந்தபட்டுள்ளனரா அல்லது வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fake 2000 rupee notes caught in Coimbatore


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->