கண்ணாடி சும்மா இருயா.. - கூட்டத்தில் கொந்தளித்த முன்னாள் அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எல்லாபுரம் பகுதியில் மத்திய ஒன்றிய திமுக சார்பில் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஆவடி எம்.எல்.ஏ நாசர், பூவிருந்தவல்லி எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களில் நாசர் கட்சி நிர்வாகிகளின் முன்னிலையில் பேசி கொண்டிருந்தார்.

அப்போது, கட்சியினர் சிலர் கீழே பேசிக் கொண்டிருந்ததால் சத்தம் வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நாசர், அவரை நோக்கி ’ஏய் கண்ணாடி சும்மா இருயா, இங்க பேசிட்டு இருக்கும் போது நீ ஏன் பேசுற, இங்க வந்து பேசு’ என்று கட்சி நிர்வாகியை கண்டித்தார்.

இதைத் தொடர்ந்து நாசர் மேடையில் பேசி கொண்டிருந்த போது, இரண்டு முறை மின் தடை ஏற்பட்டதால் சிறிது நேரம் பேச்சை நிறுத்திய நாசர் மைக்கை தட்டி, தட்டி பார்த்து விட்டு சற்று எரிச்சலடைந்தார்.

இதற்கு முன்பு திருவள்ளூரில் நாற்காலி கொண்டு வர தாமதமானதால் கட்சி நிர்வாகி மீது கல் எறிந்தது, திருத்தணியில் மைக்கை தட்டிவிட்டதாக எம்.எல்.ஏ. உதவியாளரை மேடையில் தாக்கியது என்று பொது இடங்களில் அத்துமீறி பல்வேறு சர்ச்சைகளில் நாசர் சிக்கியது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ex minister nasar speech in thiruvallur meeting


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->