முன்னாள் டிஜிபிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி  - Seithipunal
Seithipunal


விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 2023, ஜூன் 16-ஆம்தேதி பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ஓய்வு பெற்ற டிஜிபி ராஜேஷ் தாசுக்கு  இரு பிரிவுகளின் கீழ் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை  வழங்கியது. இதனை எதிர்த்து முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ்  மேல்முறையீடு  செய்தார்.   விசாரணையை வேறு மாவட்டத்துக்கு மாற்றக் கோரி  தாக்கல் செய்த ராஜேஷ்தாஸ் மனுவை  ஜனவரி 9 ஆம் தேதி சென்னை ஐகோர்ட்  தள்ளுபடி செய்தது

டிஜிபி ராஜேஷ்தாஸ் பல முறை  ஆஜராகாத நிலையில்,  அவரது வக்கீல் ஆஜராகி, வாதிட கால அவகாசம் கோரினார். ஆனால், நீதிமன்றம் மறுத்து விட்டது.  பிப்ரவரி 1-ஆம் தேதி ராஜேஷ்தாஸ் நேரில் கண்டிப்பாக 
 ஆஜராக உத்தரவிட்டது.

இதையடுத்து பிப்ரவரி 1-ஆம் தேதி விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் ஆஜரானார். அவருடைய தரப்பு வாதங்களை  முன்வைத்து ராஜேஷ்தாசே வாதாடினார். இதைத் தொடர்ந்து பிப்ரவரி 7-ஆம் தேதி வரை உத்தரவிட்டார்.

முதன்மை மாவட்ட நீதிபதி ஆர். பூர்ணிமா தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ex-DGP sentenced to 3 years in jail


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->