சத்தியமங்கலம் இராமலிங்கம் ஐயா கொரோனாவுக்கு மரணம்.. இராமலிங்கத்தை தேடி பரிதவிக்கும் குரங்குகள்.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் வடவள்ளி பகுதியை சார்ந்தவர் ராமலிங்கம் (வயது 65). இவர் கடந்த 6 வருடமாக தனது வீட்டின் பின்புறம் இருக்கும் தோட்டத்தில் குரங்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கி வந்தார். 

நாளடடைவில் குரங்குகள் ராமலிங்கத்துடன் இயல்பாக பழக தொடங்கிய நிலையில், தினமும் குரங்குகளுக்கு பட்டாணி மற்றும் சுண்டல் போன்றவற்றையும் கொடுத்து கவனித்து வந்தார். குரங்குகளும் காலப்போக்கில் ராமலிங்கத்தை தோழனாக நினைத்து தோளின் மீது ஏறி விளையாடி வந்தது. 

தினமும் காலையில் ராமலிங்கத்தை தேடி வந்து உணவுகளை சாப்பிடும் குரங்குகள், மாலையில் வனப்பகுதிக்கு சென்றுவிடும். குரங்குகளின் மீது அன்பு கொண்ட ராமலிங்கத்திற்கு, கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக கொரோனா தொற்று ஏற்பட்டு நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்த தகவல் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், ராமலிங்கத்தின் மறைவை அறியாத குரங்குகள் காலை அவரை தேடி வந்து உணவுகேட்டு, மரங்களின் மீது ஏறி நின்று ராமலிங்கத்தை தேடி கூச்சலிட்டு வருகிறது.  

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode Sathyamangalam Monkey Food Man Ramalingam Passed Away Corona 26 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->