மருத்துவர்களின் அலட்சியத்தால் பச்சிளம் சிசு பரிதாபமாக உயிரிழப்பு.. ஈரோடு மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டம்.! - Seithipunal
Seithipunal


மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக பிரசவத்தின் போதே பச்சிளம் சிசு உயிரிழந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சம்பத் நகர் பகுதியை சார்ந்தவர் கணேசன். இவரது மனைவி ரமணி. கணேசன் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவியை பிரசவத்திற்காக, கடந்த சனிக்கிழமையில் ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளார். 

கடந்த ஜூலை 30 ஆம் தேதி ரமணிக்கு சுகப்பிரசவம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று காலை மருத்துவர்கள் பனிக்குடம் உடைந்து நீரின் அளவு குறைந்து உள்ளது என்றும்., குழந்தையின் இதயத்துடிப்பு குறைந்து வருவதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

பின்னர், சில மணிநேரம் கழித்து வந்த மருத்துவர்கள் குழந்தை இறந்து பிறந்துள்ளது என்று தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கணேசன் மற்றும் அவரது உறவினர்களின் மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, தாசில்தார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து, கணேசன் மற்றும் அவரின் உறவினர்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode Pregnant Woman Baby Died due to Doctors Irresponsible Job 5 July 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->